Adiyen sincerely thank Smt.Malathy Kesavan, an advanced devotee who has handwritten the synopsis of Samshepa Sundarakandam in Tamil by listening to the nectarian upanyasam given by H.H.Sri.Krishnapremi Swamigal (SRI ANNA).
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
To recite Sundarakanda dhyana slokams and respective acharyars thanian before commencing and mangala slokams in the end)
The pdf link post is appended below for printing
காண்டங்களில் மிகவும் அழகான காண்டம் இது . எனவே சுந்தரகாண்டம் எனப்படுகிறது. “சுந்தரே சுந்தரம் சர்வம்” என்றபடி இந்த காண்டத்தில் எல்லாமே அழகு. விஷயமும் மிக அழகாக இருக்கிறது. சப்தாலங்காரமும் வர்ணனைகளும் கவிதா நயத்தைக் காட்டுகிறது. எனவே காவ்ய நடையும் இந்த காண்டத்தில் அழகு. கதாநாயகனும் கதாநாயகியும் பிரிந்து கஷ்டப்படும் போது , ஹனுமான் தூது சென்று இருவரையும் சமாதானப்படுத்தி நிம்மதி அளிக்கிறான். எனவே இது அழகான காண்டம். சுந்தர மூர்த்தியான ஹனுமானின் பெருமையை கூறுவதால் இது சுந்தர காண்டம். உலகையே மோஹிக்க செய்யும் பகவானாகிய இராமபிரானையும் மோஹிக்க செய்யும் அழகுடைய பக்தனான ஹனுமானின் பெருமையைக் கூறுவதால் இது சுந்தர காண்டம். ஏனெனில் பக்தனே சுந்தரன். பக்தியே சிறந்த சௌந்தர்யம்.
ஜாம்பவான் முதலிய வானர வீரர்களின் பிரார்த்தனையால் ஹனுமான் மந்தர மலையில் ஏறி இலங்கையை நோக்கி புறப்படலானார்.
ததோ ராவண நீதாயா: ஸீதாயா: சத்ருகர்ஸந :!
இயேஷ பதமன்வேஷ்டும் சாரணசரிதே பதி!!
பிறகு சத்ருக்களை இளைக்கச் செய்யும் வீரனான ஹனுமான் ராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட சீதையின் இருப்பிடத்தை சாரணர்கள் போகும் பாதையான ஆகாயத்தில் தேட விரும்பினார். கட்டும் காவலுமாய்…
View original post 8,785 more words